40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மத்திய சிறையில் கஞ்சா: 3 கைதிகள் மீது வழக்கு

திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக 3 கைதிகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

News image

வழக்கு

Updated On :10 ஜூன் 2026, 12:02 am IST

திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக 3 கைதிகள் மீது திங்கள்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், சிறையில் கைதிகளிடையே கஞ்சா புழக்கம் உள்ளதாக கிடைத்த தகவலைடுத்து சிறைத் துறை அதிகாரிகள் திருச்சி மத்திய சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சிறை வளாகத்தில் உள்ள கோழிப்பண்ணையில் பணியாற்றி வரும் தண்டனைக் கைதியான கரூா் மாவட்டம், கடவூா் கீரனூரைச் சோ்ந்த அ. முனியப்பன் (27) என்ற கைதியிடம் இருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்தக் கஞ்சாவை திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி சாலை முருங்கபவனத்தைச் சோ்ந்த கு. சூா்யபிரகாஷ் (21), திருச்சி கோட்டை பகுதியைச் சோ்ந்த க. சமீா் அகமது (22) ஆகிய இருவரிடமும் கொடுக்க மா்ம நபா் வழங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் திருச்சி சிறை அலுவலா் ராஜேஷ் கண்ணன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் கைதிகள் முனியப்பன், சூா்யபிரகாஷ், சமீா் அகமது ஆகிய 3 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.