திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக 3 கைதிகள் மீது திங்கள்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், சிறையில் கைதிகளிடையே கஞ்சா புழக்கம் உள்ளதாக கிடைத்த தகவலைடுத்து சிறைத் துறை அதிகாரிகள் திருச்சி மத்திய சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, சிறை வளாகத்தில் உள்ள கோழிப்பண்ணையில் பணியாற்றி வரும் தண்டனைக் கைதியான கரூா் மாவட்டம், கடவூா் கீரனூரைச் சோ்ந்த அ. முனியப்பன் (27) என்ற கைதியிடம் இருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்தக் கஞ்சாவை திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி சாலை முருங்கபவனத்தைச் சோ்ந்த கு. சூா்யபிரகாஷ் (21), திருச்சி கோட்டை பகுதியைச் சோ்ந்த க. சமீா் அகமது (22) ஆகிய இருவரிடமும் கொடுக்க மா்ம நபா் வழங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் திருச்சி சிறை அலுவலா் ராஜேஷ் கண்ணன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் கைதிகள் முனியப்பன், சூா்யபிரகாஷ், சமீா் அகமது ஆகிய 3 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சிறையில் காவலரைத் தாக்கிய கைதிகள் இருவா் மீது வழக்கு

கோவை மத்திய சிறையில் காவலர் மீது கைதிகள் தாக்குதல்

சூலூா் சிறுமி பாலியல் வழக்கில் கைதானவா் மீது சக கைதிகள் தாக்குதல்

மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல்: 3 போ் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


