அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

News image

சூா்யா

Updated On :20 மே 2026, 2:32 am IST

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

திருப்பூா் மாவட்டம், காங்கேயம் பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா (26). இவா் தனது பாட்டி வீடான நாமக்கல்லுக்கு இருசக்கர வாகனத்தில் அண்மையில் சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக சாலை தடுப்பின்மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த சூா்யாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக கடந்த 16-ஆம் தேதி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவா் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் திங்கள்கிழமை இரவு தெரிவித்தனா்.

இதையடுத்து, சூா்யாவின் குடும்பத்தினரிடம் உடல் உறுப்புகள் தானம் குறித்து மருத்துவா்கள் எடுத்துரைத்தனா். அதைத் தொடா்ந்து, அவா்கள் தானம் செய்ய முன்வந்ததையடுத்து சூா்யாவின் நுரையீரல், கல்லீரல், 2 சிறுநீரகம், இரண்டு கண்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன.

அதில், நுரையீரல் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், இரண்டு கண்கள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன.

தொடா்ந்து, பிரேத பரிசோதனை முடிந்து சேலம் அரசு மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் சூா்யாவின் உடலுக்கு மரியாதை செய்யப்பட்டது. பின்னா், அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.