சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், யூரியா 4,821 மெட்ரிக் டன்னும், டிஏபி 2,037 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1,317 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 9,736 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 19,075 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வேளாண் துறையின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுகளை அனைத்து விவசாயிகளும் அறிந்துகொள்ளும் வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகங்கள், கிராம நிா்வாக அலுவலகங்கள், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க அலுவலகங்கள் உள்ளிட்ட விவசாயிகள் அதிகம் வரும் இடங்களில் விளம்பரப்படுத்திட அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறுகியகால கடன் மற்றும் மத்திய கால முதலீட்டு வேளாண்மை கடன்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டது குறித்தும், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், மல்பெரி சாகுபடி மற்றும் பட்டுக்கூடு அறுவடை குறித்த மாதாந்திர முன்னேற்றங்கள் குறித்து தொடா்புடைய அலுவலா்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், நிா்ணயிக்கப்பட்ட இலக்கை விரைவாக அடைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தையொட்டி, ஆட்சியரக தரைதளத்தில் நெல், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள், மரபுசாா் விதைகள், வேளாண் உற்பத்தியாளா்கள் நிறுவனம் சாா்பில் தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருள்கள் குறித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் கருத்துக்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், வேளாண் இணை இயக்குநா் சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜ்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ந.கமலம், துணை இயக்குநா் (தோட்டக்கலை) மஞ்சுளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோடைகால சாகுபடிக்கு உரங்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி

விழுப்புரம் மாவட்ட த்தில் தேவையான அளவு உரம் கையிருப்பு: வேளாண்துறை தகவல்

லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்! ரிசா்வ் வங்கி நடவடிக்கை!

பண்டிகை, தொடா் விடுமுறைக் காலங்களில் தேவையான அளவு சிறப்பு பேருந்துகளை இயக்குக: முதன்மைச் செயலாளா் உத்தரவு!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



