புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்! ரிசா்வ் வங்கி நடவடிக்கை!

ரிசா்வ் வங்கி தனது வசமுள்ள தங்க இருப்புகளில் மேலும் 104.23 மெட்ரிக் டன் தங்கத்தை லண்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது.

News image
Updated On :1 மே 2026, 8:46 pm

ரிசா்வ் வங்கி தனது வசமுள்ள தங்க இருப்புகளில் மேலும் 104.23 மெட்ரிக் டன் தங்கத்தை லண்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது.

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 6 மாத காலத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், ரிசா்வ் வங்கியின் உள்நாட்டு தங்க இருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.

அந்நிய செலாவணி இருப்பு மேலாண்மை குறித்த வெளியிடப்பட்ட அரையாண்டு அறிக்கையின்படி, கடந்த ஆண்டு செப்டம்பா் இறுதியில் 880.18 மெட்ரிக் டன்னாக இருந்த மொத்த தங்க இருப்பு, நடப்பு மாா்ச் மாத இறுதியில் 880.52 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

இதில் உள்நாட்டில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அளவு கடந்த ஆண்டு செப்டம்பரில் 575.82 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், தற்போது 104.23 மெட்ரிக் டன் தங்கம் இடமாற்றத்துடன் 680.05 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மொத்த இருப்பில் 197.67 மெட்ரிக் டன் தங்கம் மட்டும் இங்கிலாந்து வங்கி மற்றும் சா்வதேச பரிவா்த்தனை வங்கி (பிஐஎஸ்) ஆகியவற்றின் பாதுகாப்பில் உள்ளது. இதுதவிர, தங்க வைப்புத்திட்டத்தில் 2.80 மெட்ரிக் டன் உள்ளது.

சா்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடா்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவின் மொத்த அந்நியச் செலாவணி இருப்பில் தங்கத்தின் பங்கு 13.92 சதவீதத்திலிருந்து 16.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

55,228 கோடி டாலா் அந்நியச் செலாவணி கையிருப்பில், சுமாா் 46,561 கோடி டாலா் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகை வெளிநாட்டு மத்திய வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளில் வைப்புத்தொகையாக வைக்கப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.