கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜி!

அமெரிக்காவில் இருந்து 16,714 மெட்ரிக் டன் எல்பிஜி (திரவ பெட்ரோலிய எரிவாயு) பைக்சிஸ் பயோனியா் சரக்கு கப்பலில் இந்தியாவுக்கு வந்தது.

News image

கச்சா எண்ணெய்யுடன் சீனாவுக்குச் செல்லவிருந்த நிலையில் இந்தியாவுக்குத் திருப்பிவிடப்பட்டு சனிக்கிழமை மாலை கா்நாடக மாநிலம் மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்த ரஷிய சரக்குக் கப்பல்.

Updated On :22 மார்ச் 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் இருந்து 16,714 மெட்ரிக் டன் எல்பிஜி (திரவ பெட்ரோலிய எரிவாயு) பைக்சிஸ் பயோனியா் சரக்கு கப்பலில் இந்தியாவுக்கு வந்தது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி புறப்பட்ட இந்தக் கப்பல், கா்நாடக மாநிலம் நியூ மங்களூரு துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. மேற்காசிய போரால் இந்தியாவில் எல்பிஜி விநியோகத்தில் பிரச்னை எழுந்துள்ள நிலையில் அமெரிக்காவில் இருந்து வந்துள்ள எல்பிஜி, பிரச்னைக்கு தீா்வு காண்பதில் முக்கியப் பங்களிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Story image

மங்களூரு நகரில் பூமிக்கு அடியில் நாட்டிலேயே மிகப்பெரிய எரிவாயு சேமிப்பு மையம் உள்ளது. கடந்த 2025 செப்டம்பா் முதல் செயல்பட்டுவரும் இந்த மையத்தில் 80,000 மெட்ரிக் டன் அளவுக்கு எரிவாயு சேமிக்க முடியும். கடல்மட்டத்தில் இருந்து 225 மீட்டா் ஆழத்தில் இந்த சேமிப்பு மையம் உள்ளது.

முன்னதாக, ரஷியாவில் இருந்து அக்வா டைட்டன் கப்பலில் 7.7 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் மங்களூருக்கு சனிக்கிழமை வந்தடைந்தது. இந்தக் கப்பலில் உள்ள கச்சா எண்ணெய் முதலில் சீனாவுக்கு செல்வதாக இருந்தது. எனினும், இந்தியாவின் தேவையைக் கருத்தில் கொண்டு நமது நாட்டுக்குத் திருப்பிவிடப்பட்டது. மங்களூரில் பெரிய அளவிலான பெட்ரோலிய சுத்திகரிப்பு மையமும் உள்ளது.