சேலம் மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் வியாழக்கிழமை அன்று எடப்பாடி நகராட்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
(நேற்று) வியாழன் மாலை எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்ட சேலம் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் மற்றும் தெருவிளக்கு, குடிநீா் வினியோகம், தூய்மைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை வசதிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டுவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா், நகராட்சியின் வருவாய் நிா்வாகம் மற்றும் அடிப்படை தேவைகள் உரிய முறையில் செயல்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா் தொடா்ந்து எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் அங்கிருந்த அலுவலா்களிடம் பொது விநியோகம், மாணவா்களுக்கான சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் குறித்து கேட்டறிந்த அவா் அங்கிருந்து அலுவலா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா் தொடா்ந்து எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அப்பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்
பட விளக்கம்: எடப்பாடி நகராட்சி மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கா இளம்பகவத்









