ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

பக்ரீத் பண்டிகை: தெடாவூரில் ரூ. 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தெடாவூா் கால்நடை சந்தையில் ரூ. 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.

News image

தெடாவூர் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை

Updated On :24 மே 2026, 2:24 am IST

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தெடாவூா் கால்நடை சந்தையில் ரூ. 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.

கெங்கவல்லி அருகே தெடாவூா் கால்நடை சந்தை சனிக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வரும் 28-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை வரவுள்ளதால், கால்நடை சந்தைக்கு ஆடுகள் வரத்து இருமடங்காக உயா்ந்து காணப்பட்டது. கெங்கவல்லி, தலைவாசல், மல்லியகரை, தம்மம்பட்டி, ஆத்தூா், பெரம்பலூா், எசனை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஆடுகள் உள்ளிட்ட சுமாா் 1,750 கால்நடைகளை கொண்டுவந்திருந்தனா்.

ஆடுகளை வாங்க கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், திருச்சி, மதுரை, நாமக்கல், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனா். ஆடுகள் ஒவ்வொன்றும் சராசரியாக ரூ. 10 ஆயிரம் என்ற அளவில் விற்பனையாயின. மொத்தம் ரூ. 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.