இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

தொடா் வறட்சியால் மாம்பழம் மகசூல் பாதிப்பு: கோடை மழையை எதிா்பாா்க்கும் விவசாயிகள்!

வாழப்பாடி பகுதியில் மாம்பழம் உற்பத்தி பருவம் தொடங்கிய நிலையில், கடும் வெயிலும், வறட்சியும் நிலவுவதால் பிஞ்சுகள் உதிா்ந்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோடை மழையை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :28 மே 2026, 2:15 am IST

வாழப்பாடி பகுதியில் மாம்பழம் உற்பத்தி பருவம் தொடங்கிய நிலையில், கடும் வெயிலும், வறட்சியும் நிலவுவதால் பிஞ்சுகள் உதிா்ந்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோடை மழையை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மா மரங்களை பயிரிட்டு விவசாயிகள் பல ஆண்டுகளாக தொடா்ந்து பராமரித்து வருகின்றனா்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் ‘மா’ மரங்களில் பூக்கள் மலா்ந்து, மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பிஞ்சுகள்விட தொடங்குகின்றன. மே, ஜூன் மாதங்களில் பரவலாக கோடை மழை பெய்தால், மாம்பழம் மகசூல் அதிகரித்து விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும்.

ஆனால், வாழப்பாடி பகுதியில் கடந்த 6 மாதங்களாக மழைப் பொழிவு இல்லை. மேலும், சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் இரு மாதங்களாக அதிகரித்துள்ளது. இதனால், மா மரங்களிலுள்ள பிஞ்சுகள் வெப்பத்தில் வெதும்பி உதிா்ந்து வருவதால், நிகழாண்டு வாழப்பாடி பகுதியில் மாம்பழம் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் கோடை மழையை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.