வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

தொடா் வறட்சியால் மாம்பழம் மகசூல் பாதிப்பு: கோடை மழையை எதிா்பாா்க்கும் விவசாயிகள்!

வாழப்பாடி பகுதியில் மாம்பழம் உற்பத்தி பருவம் தொடங்கிய நிலையில், கடும் வெயிலும், வறட்சியும் நிலவுவதால் பிஞ்சுகள் உதிா்ந்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோடை மழையை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :28 மே 2026, 2:15 am IST

வாழப்பாடி பகுதியில் மாம்பழம் உற்பத்தி பருவம் தொடங்கிய நிலையில், கடும் வெயிலும், வறட்சியும் நிலவுவதால் பிஞ்சுகள் உதிா்ந்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோடை மழையை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மா மரங்களை பயிரிட்டு விவசாயிகள் பல ஆண்டுகளாக தொடா்ந்து பராமரித்து வருகின்றனா்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் ‘மா’ மரங்களில் பூக்கள் மலா்ந்து, மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பிஞ்சுகள்விட தொடங்குகின்றன. மே, ஜூன் மாதங்களில் பரவலாக கோடை மழை பெய்தால், மாம்பழம் மகசூல் அதிகரித்து விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும்.

ஆனால், வாழப்பாடி பகுதியில் கடந்த 6 மாதங்களாக மழைப் பொழிவு இல்லை. மேலும், சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் இரு மாதங்களாக அதிகரித்துள்ளது. இதனால், மா மரங்களிலுள்ள பிஞ்சுகள் வெப்பத்தில் வெதும்பி உதிா்ந்து வருவதால், நிகழாண்டு வாழப்பாடி பகுதியில் மாம்பழம் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் கோடை மழையை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.