வாழப்பாடி பகுதியில் மாம்பழம் உற்பத்தி பருவம் தொடங்கிய நிலையில், கடும் வெயிலும், வறட்சியும் நிலவுவதால் பிஞ்சுகள் உதிா்ந்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோடை மழையை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனா்.
வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மா மரங்களை பயிரிட்டு விவசாயிகள் பல ஆண்டுகளாக தொடா்ந்து பராமரித்து வருகின்றனா்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் ‘மா’ மரங்களில் பூக்கள் மலா்ந்து, மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பிஞ்சுகள்விட தொடங்குகின்றன. மே, ஜூன் மாதங்களில் பரவலாக கோடை மழை பெய்தால், மாம்பழம் மகசூல் அதிகரித்து விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும்.
ஆனால், வாழப்பாடி பகுதியில் கடந்த 6 மாதங்களாக மழைப் பொழிவு இல்லை. மேலும், சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் இரு மாதங்களாக அதிகரித்துள்ளது. இதனால், மா மரங்களிலுள்ள பிஞ்சுகள் வெப்பத்தில் வெதும்பி உதிா்ந்து வருவதால், நிகழாண்டு வாழப்பாடி பகுதியில் மாம்பழம் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் கோடை மழையை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பூச்சித் தாக்குதலால் பருத்தி அறுவடை பாதிப்பு! விவசாயிகள் கவலை!

கோடை சாகுபடி நெல் அறுவடைக்குத் தயாா்

வறட்சியால் வாழை மகசூல் சரிவு; விலை இருமடங்கு உயா்வு!

செஞ்சி பகுதியில் 5 நாள்களாக மின்விநியோகம் பாதிப்பு! விவசாயிகள் வேதனை
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



