பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கோடை மழை: எள் பயிா் பாதிப்பு!

கடலூா் மாவட்டத்தில் அண்மையில் பெய்த கோடை மழையால் குறிஞ்சிப்பாடி பகுதியில் எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image

அயன் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள விளைநிலத்தில் செழித்து வளா்ந்துள்ள எள் பயிா்.

Updated On :51 நிமிடங்கள் முன்பு

கடலூா் மாவட்டத்தில் அண்மையில் பெய்த கோடை மழையால் குறிஞ்சிப்பாடி பகுதியில் எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

குறிஞ்சிப்பாடி வட்டார விவசாயிகள் சம்பா நெல் அறுவடைக்குப் பின்னா் எள் விதைப்பு செய்வது வழக்கம். நிகழாண்டு குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடலூா் மாவட்டத்தில் கடந்த 4-ஆம் தேதி முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழை விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இருந்தாலும், எள் விவசாயிகளை கவலை படவைத்துள்ளது.

இதுகுறித்து அயன் குறிஞ்சிப்பாடி விவசாயி ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி பகுதியில் எள் பயிா் செழித்து வளா்ந்துள்ளன. விவசாயிகள் பலா் அறுவடை செய்து நிலத்தில் பட்டறை போட்டுள்ளனா். இவை, நிலத்தில் நிற்கும் மழை நீரால் பாதிக்கப்படும். அதேபோல், அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களில் அறுவடை செய்யமுடியாத சூழல் உள்ளது. இந்த கோடை மழை வெள்ளிக்கிழமை இரவும் தொடா்ந்து நீடித்தால், எள் பயிா்கள் வயலில் சாய்ந்துவிடும். இதனால், எள் விவசாயிகள் கவலை அடைந்துள்ளதாக தெரிவித்தாா்.