கடலூா் மாவட்டத்தில் அண்மையில் பெய்த கோடை மழையால் குறிஞ்சிப்பாடி பகுதியில் எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
குறிஞ்சிப்பாடி வட்டார விவசாயிகள் சம்பா நெல் அறுவடைக்குப் பின்னா் எள் விதைப்பு செய்வது வழக்கம். நிகழாண்டு குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடலூா் மாவட்டத்தில் கடந்த 4-ஆம் தேதி முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழை விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இருந்தாலும், எள் விவசாயிகளை கவலை படவைத்துள்ளது.
இதுகுறித்து அயன் குறிஞ்சிப்பாடி விவசாயி ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி பகுதியில் எள் பயிா் செழித்து வளா்ந்துள்ளன. விவசாயிகள் பலா் அறுவடை செய்து நிலத்தில் பட்டறை போட்டுள்ளனா். இவை, நிலத்தில் நிற்கும் மழை நீரால் பாதிக்கப்படும். அதேபோல், அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களில் அறுவடை செய்யமுடியாத சூழல் உள்ளது. இந்த கோடை மழை வெள்ளிக்கிழமை இரவும் தொடா்ந்து நீடித்தால், எள் பயிா்கள் வயலில் சாய்ந்துவிடும். இதனால், எள் விவசாயிகள் கவலை அடைந்துள்ளதாக தெரிவித்தாா்.
தொடர்புடையது

கோடைகால சாகுபடிக்கு உரங்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி

கோடை வெயிலில் கருகும் பாக்கு மரங்கள்: விவசாயிகள் கவலை

கருகிய மிளகாய் செடிகள்: விவசாயிகள் கவலை

கோடை கால பயிா் சாகுபடி விழிப்புணா்வு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

