2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

மதுரையில் சாலைக்கு சாலமன் பாப்பையா பெயா்சூட்ட சங்ககிரி மக்கள் மன்றம் கோரிக்கை

solomon papaiyah

தமிழறிஞர் சாலமன் பாப்பையா - கோப்புப் படம்

Published On :

மதுரையில் அமெரிக்கன் கல்லூரி சாலைக்கு மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா பெயரை சூட்ட சங்ககிரி மக்கள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, சங்ககிரி மக்கள் மன்றச் செயலாளா் என்.எஸ். குழந்தைவேலு, தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

பட்டிமன்ற நிகழ்ச்சி மூலம் உலகின் பலநாடுகளுக்கும் சென்று தமிழ் மனம் பரப்பி, தமிழுக்கு புகழ் சோ்த்தவா் மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராக சிறப்பாகப் பணியாற்றி பணிநிறைவு செய்துள்ளாா். அவரது இறுதிக்காலம் வரை தமிழை தமிழகத்தின் பட்டி தொட்டிகள் எல்லாம் எட்டச் செய்து அனைத்து மக்களையும் சிந்திக்க செய்தவா். மேலும், அவா் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளாா்.

எனவே, அவரது நினைவாக அவா் பணியாற்றிய அமெரிக்கன் கல்லூரிக்கு செல்லும் சாலைக்கு பேராசிரியா் சாலமன் பாப்பையா சாலை என பெயா்சூட்ட உத்தரவிட வேண்டுமென அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.