மதுரை, அக். 27 : மதுரை அரசரடியில் உள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரி முதல்வர் ஞானவரம் கூறியது:
1969-ம் ஆண்டு அக்.28-ல் தென்னிந்திய திருச்சபையின் திருமறையூர் தமிழ்நாடு இறையியல் கல்லூரியும், தமிழ் சுவிசேட லூதரன் திருச்சபை மற்றும் ஆர்க்காடு லூதரன் திருச்சபையின் தரங்கம்பாடியில் உள்ள குருசாலையும் இணைந்து மதுரை அரசரடியில் தமிழ்நாடு இறையியல் கல்லூரியை நிறுவின. கல்லூரி தொடங்கி 40-வது ஆண்டு விழா அக்.28-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி மூன்று தினங்கள் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. அக்.30-ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் அமைச்சர் ஆ.தமிழரசி, மேயர் தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்றார் அவர்.