ஆண்டிபட்டி, ஜன. 30: ஆண்டிபட்டி என்.ஜி.ஒ. நகரில் உள்ள கணேசன் என்பவரது வீட்டுக்குள் ராட்சத பல்லி போன்ற 3 அடி நீளம் கொண்ட உருவம் திங்கள்கிழமை மதியம் சென்றுள்ளது. அதை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொணடு வெளியே வந்து, அருகில் உள்ள வனத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வனத் துறையினர் வந்து பார்த்துவிட்டு, உடும்பு எனத் தெரிவித்தனர். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் வந்து வீட்டுக்குள் இருந்த உடும்பைப் பிடித்து ஆண்டிபட்டி வனச்சரகர் சௌந்தரபாண்டியனிடம் ஒப்படைத்தனர். வனத் துறையினர் ஆண்டிபட்டி அருகே உள்ள சாந்தமலை வனப் பகுதியில் உடும்பைக் கொண்டு விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.