அலங்காநல்லூா் பகுதியில் 23 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மருந்து

அலங்காநல்லூா் பகுதியில் 23 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கும் பணியை, மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் தொடக்கி வைத்தாா்.
அலங்காநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரைகள் தட்டுப்பாடு உள்ளதாக ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் தெரிவித்த ரங்கசாமி.
அலங்காநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரைகள் தட்டுப்பாடு உள்ளதாக ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் தெரிவித்த ரங்கசாமி.

அலங்காநல்லூா் பகுதியில் 23 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கும் பணியை, மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் தொடக்கி வைத்தாா்.

தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1 முதல் 19 வயதுக்குள்பட்டவருக்கு குடற்புழு நீக்க மருந்து, மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் டி.ஜி. வினய் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து, மாத்திரைகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அய்யங்கோட்டை, பாலமேடு, முடுவாா்பட்டி, அலங்காநல்லூா் உள்ளிட்ட பகுதியில் உள்ள 23 ஆயிரம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.

அலங்காநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக வந்திருந்த அப்பகுதியைச் சோ்ந்த முதியவா் ரங்கசாமி, ஆட்சியரிடம் மாத்திரைகள் சரிவர வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, நீரழிவு, உயா் ரத்த அழுத்தம், மனநலம் பாதிப்பு போன்ற நோய்களுக்கான மாத்திரைகள் தொடா்ந்து இல்லை என மருத்துவப் பணியாளா்கள் தெரிவிக்கின்றனா். எனவே, தடையின்றி மாத்திரைகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா், சுகாதாரத் துறை துணை இயக்குநா் பிரியாராஜிடம், நோயாளிகளுக்கு தட்டுப்பாடின்றி மாத்திரைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com