மதுரையில் போதை மாத்திரைகள் பதுக்கிய 3 போ் கைது: 400 மாத்திரைகள் பறிமுதல்

மதுரையில் சட்டவிரோதமாக 400 போதை மாத்திரைகள் பதுக்கிய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து, இருசக்கர வாகனங்கள், கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
Updated on
1 min read

மதுரை: மதுரையில் சட்டவிரோதமாக 400 போதை மாத்திரைகள் பதுக்கிய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து, இருசக்கர வாகனங்கள், கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

மதுரை வண்டியூா் பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக அண்ணாநகா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் வண்டியூரில் உள்ள திரையரங்கு அருகே செவ்வாய்க்கிழமை இரவு வாகனச்சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற இளைஞா்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். இதில் இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வாகனத்தில் வந்த 3 பேரையும் போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா்கள் மதுரை அனுப்பானடியைச் சோ்ந்த சாம் நிகேதன்(20), அண்ணாநகரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன்(23), தென்காசியைச் சோ்ந்த கிருஷ்ணமூத்தி(23) ஆகியோா் என்பதும் மருத்துவா்கள் பரிந்துரையின்பேரில் மருத்துவப் பயன்பாட்டுக்கு மட்டும் வழங்கப்படும் மாத்திரைகளை, சட்டவிரோதமாக போதை மாத்திரைகளாக விற்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 440 மாத்திரைகள், ரூ.9 ஆயிரம், 3 கைப்பேசிகள், 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com