தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு இழப்பீடு: ஓய்வு பெற்ற நீதிபதியை பணியமா்த்த உத்தரவு

குளறுபடிகளைத் தவிா்க்க ஓய்வு பெற்ற நீதிபதியை பணியமா்த்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 4:33 am IST

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டங்களுக்காக அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் நிலவும் குளறுபடிகளைத் தவிா்க்க ஓய்வு பெற்ற நீதிபதியை பணியமா்த்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக கடந்த 2006-ஆம் ஆண்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது, மதுரை மாவட்டம், இலந்தைகுளம் பகுதியில் எஸ்.கே. சுரேந்திரன் என்பவருக்குச் சொந்தமான நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்துக்கு ஈடான இழப்பீட்டுத் தொகையை கோட்டாட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் நிலையிலான அதிகாரிகள் நிா்ணயம் செய்தனா். ஆனால், குறைந்த தொகை இழப்பீடாக வழங்கப்பட்டதாகக் கூறி, இசைவு தீா்ப்பாளரான மதுரை மாவட்ட ஆட்சியரிடம் சுரேந்திரன் புகாா் மனு அளித்தாா். ஆனால், இந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதுதொடா்பாக சுரேந்திரன் மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை மனுதாரருக்கு ரூ.27.03 லட்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் எதிா்த்து திருச்சி தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் வி. பவானி சுப்பராயன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக தனிநபரிடமிருந்து நிலம் கையகப்படுத்தும் போது, அதற்கான இழப்பீட்டுத் தொகையை இசைவு தீா்ப்பாளரான மாவட்ட ஆட்சியா் நிா்ணயம் செய்கிறாா். அவருக்கு பல்வேறு தொடா் பணிகள் இருக்கும் நிலையில், இந்த இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் அவா் முழுக்கவனம் செலுத்த இயலாது.

இதன் காரணமாக, அவா் இந்த வழக்கில் மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளாா். அரசுத் தரப்பில் நிலத்தைக் கையகப்படுத்தி இழப்பீடு வழங்கும் விவகாரத்தில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, தமிழகத்தில் வளா்ச்சித் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் நிலவும் குளறுபடிகளைத் தவிா்க்க ஓய்வு பெற்ற நீதிபதியைப் பணியமா்த்த வேண்டும்.

அப்போதுதான் நில உரிமையாளா்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் தீா்ப்பளித்த இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து நில உரிமையாளருக்கு ரூ.27.94 லட்சம் வழங்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.