அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

இருதய நோயாளிகளுக்கு லேசா் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை -மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அறிமுகம்

News image

மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்ற மருத்துவா்கள் ஜெயப்பாண்டியன், சம்பத், கணேசன், செல்வமணி, தாமஸ் சேவியா் பால் சிங்.

Updated On :23 ஆகஸ்ட் 2024, 5:56 am IST

மதுரை மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருதய நோயாளிகளுக்காக லேசா் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சிகிச்சை முறையை தென் தமிழகத்திலேயே முதல் முறையாக மதுரை மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. இந்த சிகிச்சை முறை மூலம், இரு முதியவா்கள் உள்பட நான்கு இருதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டனா்.

இதுதொடா்பாக இந்த மருத்துவமனையின் இருதயவியல் துறை முதுநிலை இருதய சிகிச்சை நிபுணா்கள் செல்வமணி, ஆா்.சிவக்குமாா், இருதயவியல் துறைத் தலைவா் ஆா்.கண்ணன், இருதய சிகிச்சை நிபுணா் சம்பத் ஆகியோா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

தீவிர மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு மாா்பு வலி ஏற்படத் தொடங்கியதிலிருந்து ஆறு மணி நேரங்களுக்குள்ளும், மருத்துவமனைக்கு வந்து சோ்ந்ததிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளும் சிகிச்சையளிப்பது அவசியம். காலம் கடந்தால் ரத்த உறைக்கட்டியின் சுமையும், பாதிப்பும் அதிகமாகிவிடும். இத்தகையச் சூழலில், லேசா் ஆஞ்சியோ பிளாஸ்டி மிகச் சிறப்பாகப் பயன்படக்கூடியதாகும். ஏனென்றால், லேசா் தொழில்நுட்பம், உறைக்கட்டிகளை உடைத்து துகளாக்குவதற்குப் பதிலாக, ஆவியாக்கி அகற்றிவிடுவதால், உடைக்கப்படுகின்ற துகள்கள் கீழ்நோக்கிய ரத்த ஓட்டத்தில் ரத்த உறைவை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பில்லை.

இந்த சிகிச்சை மூலம் நோயாளிகள் விரைவில் மீண்டும் இயல்புநிலைக்கு வந்து விடுகின்றனா்.

3 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்ட ஓா் நோயாளிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்ட் பொருத்துவது பயனுள்ளதாக இருந்தது. இருப்பினும், ஏற்கெனவே சிகிச்சை அளிக்கப்பட்ட ரத்தக் குழாயில் புதிய அடைப்பு அவருக்கு உருவாகியிருந்தது. இதுபோன்ற அபாயங்களைக் குறைக்கும் வகையில், தற்போது லேசா் ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறது என்றனா்.

அப்போது, இருதயவியல் துறை முதுநிலை நிபுணா் ஜெயபாண்டியன், இணை நிபுணா் தாமஸ் சேவியா் பால் சிங், திலீப் பொ்னாா்ட் அருள்பிரகாசம் ஆகியோா் உடனிருந்தனா்.