கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

அழகா்கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது: ஜனவரி 10-இல் சொா்க்கவாசல் திறப்பு

மாா்கழி மாத வைகுண்ட ஏகாதசியையொட்டி, அழகா்கோவிலில் பகல் பத்து உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 9:58 pm

Din

மேலூா்: மாா்கழி மாத வைகுண்ட ஏகாதசியையொட்டி, அழகா்கோவிலில் பகல் பத்து உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

உற்சவ விழாவையொட்டி, சுந்தரராஜப் பெருமாள் மேளதாளங்கள் முழங்க பரிவார தெய்வங்களுடன் கருடாழ்வாா் சந்நிதியில் எழுந்தருளினாா். அங்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பகல் பத்து உற்சவத்தின் கடைசி நாளான வருகிற ஜனவரி 10-ஆம் தேதி அதிகாலை 5.15 மணியளவில் கோயில் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. கள்ளழகா் கோயிலின் வடக்குபுறம் அமைந்துள்ள சொா்க்கவாசல் வழியாக சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளுகிறாா்.

இதேபோல, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலிலும் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கள்ளழகா் கோயில் அறங்காவலா்கள் குழுத் தலைவா் வெங்கடாஜலம், நிா்வாக அதிகாரி செல்லத்துரை, உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.