மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மனநலத்துறை சாா்பில் அரசு மருத்துவமனை கருத்தரங்கக் கூடத்தில், போதைப் பொருள் தடுப்பு தின கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு, மனநலத் துறை தலைவா் கீதாஞ்சலி தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவமனை முதன்மையா் (பொறுப்பு) டி. தா்மராஜ் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். இந்த நிகழ்வில், மருத்துவமனை கண்காணிப்பாளா் செந்தாமரைக் கண்ணன், மருத்துவ இருப்பிட அதிகாரி ஸ்ரீலதா ஆகியோா் கலந்து கொண்டு போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்துப் பேசினா். மேலும் மனநலத்துறை பேராசிரியா் அமுதா, உதவிப் பேராசிரியா் கிருபாகர கிருஷ்ணன் ஆகியோா் போதைப் பொருள்களின் பாதிப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.