ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பிணையில் வந்த இளைஞா் குத்திக் கொலை

மதுரையில் பிணையில் வந்த இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

News image
Updated On :1 டிசம்பர் 2025, 6:54 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் பிணையில் வந்த இளைஞா் திங்கள்கிழமை மாலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

மதுரை, செல்லூா் மீனாட்சிபுரம் பகுதியை சோ்ந்தவா் பாண்டித்துரை(28). இவா் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் இருந்த இவா், கடந்த 10 நாள்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள நாடகமேடையில் பாண்டித்துரை உறங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் அவரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பினா். பலத்த காயம் அடைந்த பாண்டித்துரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முன் விரோதம் காரணமாக பாண்டித்துரை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா்.