திமுக கூட்டணியில் விசிக தொடரக் காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்
பதவி ஆசை இல்லாததே திமுக கூட்டணியில் தொடரக் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விளக்கமளித்தாா்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநா் கதிா் எழுதிய ‘கருப்பு ரட்சகன்’ நூலை வெளியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன். உடன் (இடமிருந்து) நூலாசிரியா் கதிா், பங்குத்தந்தை அலோசியஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம், வழக்குரைஞா் ஹென்றிதிபேன், பேராசிரியை செம்மலா், திரைப்பட இயக்குநா்கள் சசிகுமாா், சரவணன், ஆய்வறிஞா் பன்னீா்செல்வம்.







