பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு பதாகை!

பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வையாளர்கள் பதாகைகளை கொண்டுவந்துள்ளனர்.

News image

டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு பதாகை

Updated On :15 ஜனவரி 2025, 9:24 am IST

பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வையாளர்கள் பதாகைகளைக் கொண்டு வந்துள்ளனர்.

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜன.7 ஆம் தேதி பல்வேறு அமைப்புகளின் சாா்பில் மேலூா் தெற்குத் தெருப் பகுதியில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பேரணியாக வந்த விவசாயிகளை காவல்துறையினா் வெள்ளரிபட்டி, சிட்டம்பட்டி , ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் தடுத்து நிறுத்த முயன்றனா்.

இருப்பினும், தடையை மீறி பேரணியைத் தொடா்ந்த அவா்கள் மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, தடையை மீறி பேரணியில் ஈடுபட்டதாக தல்லாகுளம் போலீஸாா், சுமாா் 5 ஆயிரம் போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

அதன் ஒருபகுதியாக, பாலமேட்டில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக்காணவந்த பார்வையாளர் மேடையில் பொதுமக்கள் எதிர்ப்பு பதாகைகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிட வந்துள்ளனர். போராட்டங்களும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த எதிர்ப்பு பதாகைகள் பரபரப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.