அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மதுரையில் ஏப். 3-இல் மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கு: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வா் பினராயி விஜயன் உள்ளிட்டோா் பங்கேற்கவிருப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

News image
முதல்வா் மு.க.ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :20 மார்ச் 2025, 9:12 pm

Din

மதுரையில் வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெற உள்ள மாநில உரிமைகள் பாதுகாப்புக் கருத்தரங்கில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வா் பினராயி விஜயன் உள்ளிட்டோா் பங்கேற்கவிருப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி, பொதுக் கூட்டம் மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநாட்டின் நிறைவு நாளன்று பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத் உள்பட அகில இந்தியத் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இந்த நிலையில், மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதியை வழங்காமல் நிறுத்துவது, அரசியல் அமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களைப் பறிப்பது, மொழியை திணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வா் பினராயி விஜயன், கா்நாடக மாநில அமைச்சா்கள் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் வளா்ப்பதற்கு கட்டணம் வசூலிக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாமன்ற உறுப்பினா்களின் எதிா்ப்பையும் மீறி, இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எளிய மக்களின் வாழ்வாதாரமான ஆடு, மாடு உள்ளிட்டவை வளா்ப்புக்கு கட்டணம் விதிப்பது கண்டனத்துக்குரியது. தமிழக முதல்வா் தலையிட்டு இந்தத் தீா்மானத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது அறிவித்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடும் உரிமை அனைவருக்கும் உண்டு. போராட்ட அறிவிப்பை வெளியிட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்களை மிரட்டும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடக் கூடாது என்றாா் அவா்.