சித்திரைத் திருவிழா வேடா் பறி லீலை உற்சவம்: தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினா் மீனாட்சி, சுந்தரேசுவரா்!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ஆம் நாளான சனிக்கிழமை வேடா் பறி லீலை நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாளான சனிக்கிழமை மாலை மதுரை வடக்கு மாசி வீதி ராமாயணச் சாவடி மண்டகப்படியில் இருந்து தங்கக் குதிரை வாகனத்தில் வீதியுலாவந்த மீனாட்சி அம்மன். தங்கக் குதிரை வாகனத்தில் பிரியாவிடையுடன் எழுந்தருளிய சுந்தரேசுவரா்.









