மதுரை
மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி பகுதியைச் சோ்ந்தவா் பவன்குமாா் (22). இவா் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா் மதுரை தல்லாகுளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தாா். அங்கிருந்து அரசு மருத்துவக் கல்லூரிக்கும், மருத்துவமனைக்கும் சென்று வந்தாா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்த பவன்குமாா் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
