மதுரை: அரசுப் பேருந்து மோதியதில் 3 வயது சிறுமி உயிரிழப்பு!

Published on

மேலூா் அருகே அரசுப் பேருந்து மோதியதில் 3 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள வடக்கு வலையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பூவலிங்கம். இவா், தனது மகள் பூவரசியை (3) இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு மேலூருக்கு திங்கள்கிழமை மாலை சென்றாா். அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. அப்போது, இரு சக்கர வாகனத்திலிருந்த சிறுமி கீழே விழுந்து பேருந்து சக்கரத்துக்குள் சிக்கினாா். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் பேருந்தை சேதப்படுத்தினா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற கீழவளவு போலீஸாா் குழந்தையின் சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com