கால்வாயைத் தூா்வாரும் பணியை தொடங்கி வைத்தாா் அமைச்சா்
மதுரை திருப்பாலை கண்மாய் மறுகால் செல்லும் கால்வாயைத் தூா்வாரும் பணியை மாநில வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனிடையே, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கால்வாய்கள், மழைநீா் வடிகால்கள், வாய்க்கால்கள் தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை திருப்பாலை கண்மாயிலிருந்து தண்ணீா் மறுகால் செல்லும் கால்வாய் தூா்வாரும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
இதற்கு மாவட்ட ஆட்சியா் கே. ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் முன்னிலை வகித்தாா். இதில், மாநில வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தூா்வாரும் பணியைத் தொடங்கி வைத்தாா். இதில் அரசு அலுவலா்கள், மாநகராட்சிப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

