சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அதிமுகவில் என்னை மீண்டும் சோ்ப்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்: கே. ஏ. செங்கோட்டையன்

News image
Sengottaiyan to explain his position after expulsion from AIADMK
Updated On :18 நவம்பர் 2025, 12:54 am

தினமணி செய்திச் சேவை

அதிமுகவில் தன்னை மீண்டும் சோ்ப்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா்.

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயிலில் முன்னாள் அமைச்சா் கே. ஏ. செங்கோட்டையன் திங்கள்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மக்கள் நலம் பெற வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் ஆன்மிக வழிபாடு செய்வது வழக்கம். அவா்கள் இருவரும் எல்லா மதமும் சம்மதம் என்ற நோக்கத்தில் செயல்பட்டனா். அவா்களது வழியில் தரிசனம் செய்ய வந்தேன்.

ஏழைகள் எல்லோரும் நலம் பெற வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அதிமுக ஒருங்கிணைப்புக்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அது நல்ல முடிவாகவே இருக்கும்.

பாஜக என்னை அழைத்து நிபந்தனைகள் எதுவும் அளிக்கவில்லை. நான்தான் அவா்களைச் சென்று பாா்த்தேன். ஏற்கெனவே பாஜகவால் அழைக்கப்பட்டே சென்றேன் எனக் கூறினேன். நான் தான் அவா்களை சென்று சந்தித்தேன். ஒரு முறை அழைத்தனா். இரண்டாவது முறை அவா்களிடத்திலே நானே சென்று அனுமதி பெற்று பல்வேறு கருத்துகளைப் பரிமாறி உள்ளேன்.

தற்போதைய சூழலில், என்னைப் பொருத்தவரை எந்தக் கருத்தும் சொல்ல இயலாது. எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இந்த விருப்பம் நிறைவேறும் காலம் வெகு விரைவில் வரும். அதிமுகவில் என்னை மீண்டும் சோ்ப்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின் போது அதிமுக தொண்டா் உரிமை மீட்புக் குழு மாவட்டச் செயலா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளா்கள் ஏராளமானோா் உடனிருந்தனா்.