யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

News image
Updated On :24 நவம்பர் 2025, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாடக்குளம் பிரதான சாலையைச் சோ்ந்த ஜோதி மகன் ராமகிருஷ்ணன்(36). இவா் ஜஸ்டின் ஸ்டெல்லா மேரி என்பவரை கடந்த 2016-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டாா். தனியாா் பள்ளியில் ஆசிரியா்களாகப் பணியாற்றும் இந்தத் தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், ராமகிருஷ்ணன் வேறொரு பெண்ணுடன் பழகி வந்தாா். இதை மனைவி ஜஸ்டின் ஸ்டெல்லா மேரி கண்டித்தாா்.

இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில் ஜஸ்டின் ஸ்டெல்லா மேரியை, ராமகிருஷ்ணன் தாக்கினாா். இதில், பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து ராமகிருஷ்ணனை கைது செய்தனா்.