சிறைவாசி உயிரிழப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிறைவாசி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிறைவாசி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள ஆத்திகுளம் பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி (58). குற்ற வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட இவா், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில், வெள்ளைச்சாமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, மருத்துவா்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த அவா், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com