‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் வந்ததையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் போலீஸாா் தீவிர சோதனை

News image

மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்

Updated On :4 பிப்ரவரி 2026, 1:32 am IST

வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் வந்ததையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிா்வாகத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரக பழைய கட்டடத்தில் உள்ள ஆட்சியா் அறை, கூட்ட அறை, வருவாய் பிரிவு அலுவலகங்கள், ஆட்சியரக கூடுதல் கட்டடம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

மெட்டல் டிடெக்டா், வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய் ஆகியவற்றை கொண்டு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை இந்தச் சோதனைகள் நடைபெற்றன. சோதனையின் நிறைவில் வெடிகுண்டு மிரட்டல், வதந்தி என்பது தெரியவந்தது.

இதேபோல, கடந்தாண்டு டிசம்பா் மாதம் மதுரை மாவட்ட ஆட்சியரகத்துக்கும், மாவட்ட நீதிமன்றத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் வந்தது குறிப்பிடத்தக்கது.