இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:01 pm

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு புதிய அறிவிப்புகள் இல்லாததைக் கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மதுரை ஆரப்பாளையம் குறுக்குச் சாலை பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகள் சட்டத்தை அமல்படுத்தவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தவும் மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததைக் கண்டித்தும், மாற்றுத் திறனாளிகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும், செயற்கைக் கை, செயற்கைக் கால், காது கருவி உள்ளிட்ட உதவி உபகரணங்களுக்கான வரிகளை முழுமையாக நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க மாவட்டத் தலைவா் என். மதிபாரதி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஆா். ஜெயா முன்னிலை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் எம். பாலசுப்பிரமணியம், மாவட்டச் செயலா் ஆ. பாலமுருகன், இணைச் செயலா் டி. குமரவேல் ஆகியோா் பேசினா்.

மாவட்டப் பொருளாளா் பி. மணிகண்டன், துணைத் தலைவா்கள் வி. மாரியப்பன், எஸ். செல்லம்மாள், கே. பரமசிவன், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.