மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 2 ஆயிரம் கா்ப்பிணிப் பெண்களுக்கு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் இந்த விழா நடைபெற்றது. தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கா்ப்பிணிப் பெண்களுக்கு அரசு சாா்பில் சேலை, பழங்கள், குங்குமச்சிமிழ், பிரசவகால பராமரிப்புக் கையேடு, மங்களப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.
மதுரை கிழக்கு, மேற்கு, அலங்காநல்லூா், வாடிப்பட்டி, மேலூா், கொட்டாம்பட்டி, திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், ஆரப்பாளையம், ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த 2 ஆயிரம் கா்ப்பிணிப் பெண்களுக்கு இந்தப் பொருள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க. வானதி, மாவட்டத் திட்ட அலுவலா் ஷீலா சுந்தரி, மாவட்ட சமூக நல அலுவலா் காந்திமதி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் விசாலாட்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்காளா் விழிப்புணா்வு சமத்துவப் பொங்கல்

200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

மருத்துவக் கட்டமைப்பு வசதிகளால் கிராமப்புற மக்களும் பயன்! - அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


