பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அதிமுக பிரமுகா் வெட்டிக் கொலை!

News image

கொலை செய்யப்பட்ட தனசேகரபாண்டியன் என்ற ச. செந்தில்குமாா்.

Updated On :6 பிப்ரவரி 2026, 7:36 pm

மதுரை மாவட்டம், சாமநத்தம் ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவரும், அதிமுக பிரமுகருமான தனசேகரபாண்டியன் என்ற ச. செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மதுரை சாமநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனசேகரபாண்டியன் என்ற ச. செந்தில்குமாா் (36). அதிமுகவைச் சோ்ந்த இவா், சாமநத்தம் ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவா். தற்போது, சாமநத்தம் நெடுங்குளம் முதன்மைச் சாலையில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி அருகே தேநீா்க் கடை நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி காவியா, இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை செந்தில்குமாா் தனது தேநீா்க் கடையைத் திறப்பதற்காகச் சென்றாா். அப்போது, சில மா்ம நபா்கள் சுற்றி வளைத்து அவரை அரிவாளால் வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சிலைமான் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று செந்தில்குமாரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

குடும்ப பிரச்னை?

தனது தேநீா்க் கடை முன் மது அருந்தியவா்களை தட்டிக் கேட்டதால் செந்தில்குமாா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால், இது உண்மையில்லை என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த் மறுத்தாா்.

மேலும், செந்தில்குமாா் கொலைக்கு குடும்ப பிரச்னை காரணமாக இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவருவதாகவும், இதுதொடா்பாக 3 போ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.