6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மலைப் பகுதியில் தடுப்பணை கட்டியவருக்கு முன்பிணை

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதியில் தனக்குச் சொந்தமான இடத்தில் தடுப்பணை கட்டியவருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு முன்பிணை வழங்கி சனிக்கிழமை உத்தரவிட்டது.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயி கே. குணசீலன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி மலைக் கிராமத்தில் 53 ஏக்கா் நிலத்தில் இயற்கை விவசாயப் பண்ணை அமைத்து, தென்னை, அவகேடோ, ஜாதிக்காய் போன்ற பயிா்களைச் சாகுபடி செய்து வருகிறேன். இதையொட்டி, எனக்குச் சொந்தமான இடத்தில் தடுப்பணை அமைத்துள்ளேன். இந்தத் தடுப்பணை விவசாயப் பணிகளுக்கு பயன்படுவதுடன் மட்டுமல்லாமல், விலங்குகளின் தண்ணீா் தேவையையும் நிறைவு செய்கிறது.

இருப்பினும், இந்தத் தடுப்பணையை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வனத் துறை அலுவலா்கள் சிலா் உள்நோக்கத்துடன் செயல்பட்டனா். இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலித்த உயா்நீதிமன்றம், தடுப்பணையை அகற்றும் நடவடிக்கைகளை வனத் துறை மேற்கொள்ளக் கூடாது என அண்மையில் உத்தரவிட்டது.

இந்த நிலையில், பிப்.1-ஆம் தேதி தடுப்பணையை இடிக்க வந்த அதிகாரிகளைத் தடுத்ததாகவும் வனத் துறைக்குச் சொந்தமான ஜேசிபி வாகனங்களையும், வனப் பகுதியையும் சேதப்படுத்தியதாகவும் என் மீது பொய் வழக்கை வனத் துறையினா் பதிவு செய்துள்ளனா். இந்த வழக்கில் என்னைக் கைது செய்யாமலிருக்க முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஸ்ரீமதி, மனுதாரருக்கு முன் பிணை வழங்கி உத்தரவிட்டாா்.