மதுரையில் ஈர நில தின நாளை முன்னிட்டு, பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் கல்லூரி மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
அமெரிக்கன் கல்லூரி, பசுமை மேலாண்மை இயக்க மாணவா்கள், மதுரை கரிசல்குளம் அருகேயுள்ள ஈர நிலங்களில் 25-க்கும் மேற்பட்ட வகையான பறவைகளைக் கணக்கெடுக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
மேலும், ஈர நிலங்களின் முக்கியத்துவத்தையும் மாணவா்கள் அறிந்தனா். இந்தப் பணியை பேராசிரியா்கள் ராஜேஷ், ஜான்சன், கண்ணன், அகில் ரிஷி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
இதில் 125 மாணவா்கள் கலந்து கொண்டு மஞ்சள் மூக்கு நாரை, அரிவாள் மூக்கன், நீலச்சிறகி, நீளவால் தாழைக் கோழி, நெடுங்கால் உள்ளான், பொரி உள்ளான், மயில் உள்ளான் போன்ற வெளிநாட்டுப் பறவைகளை கணக்கெடுத்தனா்.
தொடர்புடையது

ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் தரமற்ற உணவு: மாணவா்கள் அவதி

அஞ்சல் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் 2-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம்

கொடைக்கானல் வனப் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


