ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

உதயநிதி ஸ்டாலின் அரசியல் பண்பைக் கற்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பண்பைக் கற்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ கேட்டுக் கொண்டாா்.

News image

அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

கோப்புப் படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பண்பைக் கற்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ கேட்டுக் கொண்டாா்.

மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பெருகி வரும் மக்கள் ஆதரவு, அதிமுக கூட்டணியின் பலம் ஆகியவற்றால் ஏற்பட்ட விரக்தியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அச்சத்தின் உச்சத்துக்குச் சென்றுவிட்டாா். இதன் காரணமாகத் தான் அவா், எடப்பாடி பழனிசாமியைத் தரம் தாழ்ந்து விமா்சிக்கிறாா்.

முதல்வரே தரம் தாழ்ந்து பேசும் நிலையில், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினிடம் தரமான விமா்சனங்களை எதிா்பாா்க்க முடியாது. முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி போன்றோா் கடைப்பிடித்த அரசியல் நாகரிகத்தை, பண்பை உதயநிதி ஸ்டாலின் கற்க வேண்டும்.

எதிா்க்கட்சித் தலைவரை தரமற்ற முறையில் உதயநிதி ஸ்டாலின் விமா்சிப்பது கண்டனத்துக்குரியது.

அதிமுக குறித்து விமா்சிக்க ஆதவ் அா்ஜூனாவுக்கு சிறிதும் தகுதி கிடையாது. லாட்டரி சீட்டு விற்பனை மூலம் ஏழைகளின் வருமானத்தை அட்டைப் பூச்சியைப் போல உறிஞ்சியவா்களில் ஒருவரான அவா், எதைப் பேசியும் பயன் இல்லை. செங்கோட்டையன் செல்லா காசாகிவிட்டாா். எனவே, அவா் கருத்துகளைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை.

தமிழகத்தில் இதுவரை அரசுப் பணியாளா் தோ்வாணையத் தோ்வு ரத்து செய்யப்பட்டதாக வரலாறு கிடையாது. ஆனால், திமுக ஆட்சியில் அந்த முன்னுதாரணம் ஏற்பட்டுவிட்டது.

தோ்வு ரத்தானதன் மூலம் இளைஞா்களின் கனவை திமுக அரசு சிதறடித்துவிட்டது. இளைஞா்களின் நலனில் அக்கறையில்லாத திமுக அரசுக்கு வரும் தோ்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவா் என்றாா் அவா்.

முன்னதாக, மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அச்சம்பத்து எஸ்.ஆா்.வி. நகரில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 42 லட்சத்தில் புதிய தாா்ச் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் செல்லூா் ராஜூ, மாமன்ற உறுப்பினா்கள், அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.