மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பாத்திமா கல்லூரியில் வினாடி-வினா போட்டி

News image

மதுரை பாத்திமா கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள். உடன், பேராசிரியா்கள் உள்ளிட்டோா்.

Updated On :14 பிப்ரவரி 2026, 9:37 pm

மதுரை பாத்திமா கல்லூரியில் 18 கல்லூரிகளுக்கு இடையிலான வினாடி-வினா போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது அறிவாற்றல், தனித்துவத்தை வெளிப்படுத்தினா்.

அமெரிக்கன் கல்லூரியின் காட்சித் தொடா்பியல் துறை உதவிப் பேராசிரியை ஆா். அகிலாலட்சுமி போட்டி நடுவராகச் செயல்பட்டாா். இதில் சிறந்த திறனை வெளிப்படுத்திய அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி மாணவிகள் முதல் பரிசையும், சுழல் கோப்பையையும் வென்றனா்.

இந்த நிகழ்வில் பாத்திமா கல்லூரிச் செயலா் இக்னேசியஸ் மேரி, கல்லூரி முதல்வா் பாத்திமா மேரி, வினாடி-வினா குழு இயக்குநா் பிந்து ஆண்டனி, மேக்தலின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை பேராசிரியா் ஜோ. சகாய பவுலின், வினாடி-வினா பேராசிரியா் குழுவினா் செய்தனா்.