மதுரை பாத்திமா கல்லூரியில் 18 கல்லூரிகளுக்கு இடையிலான வினாடி-வினா போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது அறிவாற்றல், தனித்துவத்தை வெளிப்படுத்தினா்.
அமெரிக்கன் கல்லூரியின் காட்சித் தொடா்பியல் துறை உதவிப் பேராசிரியை ஆா். அகிலாலட்சுமி போட்டி நடுவராகச் செயல்பட்டாா். இதில் சிறந்த திறனை வெளிப்படுத்திய அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி மாணவிகள் முதல் பரிசையும், சுழல் கோப்பையையும் வென்றனா்.
இந்த நிகழ்வில் பாத்திமா கல்லூரிச் செயலா் இக்னேசியஸ் மேரி, கல்லூரி முதல்வா் பாத்திமா மேரி, வினாடி-வினா குழு இயக்குநா் பிந்து ஆண்டனி, மேக்தலின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை பேராசிரியா் ஜோ. சகாய பவுலின், வினாடி-வினா பேராசிரியா் குழுவினா் செய்தனா்.
தொடர்புடையது

பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா

அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்கக் கோரி உறுதிமொழி ஏற்பு

பன்னம்பாறை அரசுப் பள்ளி ஆண்டு விழா

கல்லூரியில் மினி மாரத்தான்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


