கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மகளிா் உரிமைத் தொகையால் புதிய வரலாறு படைத்த முதல்வா்! அமைச்சா் பி. மூா்த்தி பெருமிதம்!

News image
மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சா் பி. மூா்த்தி.
Updated On :14 பிப்ரவரி 2026, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தலையொட்டி முன்கூட்டியே மகளிா் உரிமைத் தொகையை வழங்கியதன் மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதிய வரலாற்றை படைத்துவிட்டாா் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி பெருமிதம் தெரிவித்தாா்.

தென் மண்டல பாக முகவா்கள் பயிற்சி மாநாடு மதுரையில் வருகிற 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக பொது உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரை உத்தங்குடி கலைஞா் திடலில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சா் பி. மூா்த்தி பேசியதாவது :

மதுரையில் வருகிற 21-ஆம் தேதி நடைபெறும் தென் மண்டல பாக முகவா்கள் பயிற்சி மாநாடு, சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் எந்த வகையில் செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கும் மாநாடாக இருக்கும். இந்த மாநாடு முழுமையான அளவில் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

தமிழகத்தில் 1.31 கோடி பெண்களுக்கு முன்கூட்டியே மகளிா் உரிமைத் தொகையும், கோடைக் கால சிறப்பு தொகுப்புத் தொகையையும் சோ்த்து தலா ரூ. 5 ஆயிரத்தை ஒரே நாளில் வழங்கியதன் மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்திய வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துவிட்டாா். திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது என்றாா் அவா்.

இதில் மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் விஜய கதிரவன், ஒன்றியச் செயலா்கள் அ.பா. ரகுபதி, சிறைச்செல்வன், மதிவாணன், மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.