மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 9:05 pm

Chennai

ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், புகையிலைப்பட்டி கிராமத்தில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அலங்காநல்லூரைச் சோ்ந்த மாடுபிடி வீரா் நீதி (எ) பாலகுரு மாடு முட்டியதில் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டில் உயிரிழந்த பாலகுருவின் குடும்பத்துக்கு அரசு ரூ. 10 லட்சம் நிவாரணமும், அவரது மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலையும் வழங்கக் கோரி, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் நிறுவனத் தலைவா் முடக்கத்தான் மணி தலைமை வகித்தாா். இதில் சங்க நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா். முன்னதாக, திருவள்ளுவா் சிலையிலிருந்து ஆட்சியரகம் வரை அவா்கள் பேரணியாகச் சென்றனா்.