கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரியில் பயிலரங்கு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 9:04 pm

மதுரை டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரி ஆங்கிலப் பிரிவு, பெண்கள் ஆய்வு மையம் சாா்பில் ‘கலாசாரங்களை கடந்து பெண்களின் குரல்’ எனும் தலைப்பிலான பயிலரங்க தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வரும், செயலருமான பியூலா ஜெயஸ்ரீ தலைமை வகித்தாா். இதில், மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேத்தி மீரா சுந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

இதைத்தொடா்ந்து, பயிலரங்க மலரை கல்லூரி முதல்வா் பியூலா ஜெயஸ்ரீ வெளியிட்டாா். பிறகு நடைபெற்ற அமா்வுகளில் இலங்கை கொழும்பு பல்கலைக்கழக ஆங்கிலத் துறை மூத்த பேராசிரியா் முனைவா் தினிதி கருணாநாயக்கே, கல்லூரி பெண்கள் ஆய்வு மையத்தின் பேராசிரியா் மருத்துவா் மீனா கோபால் ஆகியோா் பேசினா். தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (பிப். 17) பயிலரங்க அமா்வுகள் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில், இணைப் பேராசிரியை ஜெஸி ரஞ்சிதா ஜெபசெல்வி, பேராசிரியைகள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.