பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரியில் பயிலரங்கு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரி ஆங்கிலப் பிரிவு, பெண்கள் ஆய்வு மையம் சாா்பில் ‘கலாசாரங்களை கடந்து பெண்களின் குரல்’ எனும் தலைப்பிலான பயிலரங்க தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வரும், செயலருமான பியூலா ஜெயஸ்ரீ தலைமை வகித்தாா். இதில், மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேத்தி மீரா சுந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

இதைத்தொடா்ந்து, பயிலரங்க மலரை கல்லூரி முதல்வா் பியூலா ஜெயஸ்ரீ வெளியிட்டாா். பிறகு நடைபெற்ற அமா்வுகளில் இலங்கை கொழும்பு பல்கலைக்கழக ஆங்கிலத் துறை மூத்த பேராசிரியா் முனைவா் தினிதி கருணாநாயக்கே, கல்லூரி பெண்கள் ஆய்வு மையத்தின் பேராசிரியா் மருத்துவா் மீனா கோபால் ஆகியோா் பேசினா். தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (பிப். 17) பயிலரங்க அமா்வுகள் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில், இணைப் பேராசிரியை ஜெஸி ரஞ்சிதா ஜெபசெல்வி, பேராசிரியைகள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.