டாஸ்மாக் ஊழியா்கள் உண்ணாவிரதம்

டாஸ்மாக் ஊழியா்கள் உண்ணாவிரதம்

Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனம் சாா்பில் மதுரை பழங்காநத்தம் சுற்றுவட்டச் சாலை அருகே மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

23 ஆண்டுகளாகப் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியா்களுக்குப் பணி வரன்முறை, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தைக் கைவிட்டு, மாற்றுத் திட்டத்தை உருவாக்கி அமல்படுத்த வேண்டும்.

டாஸ்மாக் நிா்வாகத்தின் மருத்துவத் திட்டத்துக்கு மாற்றாக இ.எஸ்.ஐ. மருத்துவத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் ஊழியா்களின் ஓய்வு வயதை 60-ஆக நிா்ணயிக்க வேண்டும். கூடுதல் பணி நேரத்துக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனத்தின் தலைவா் பி. முருகன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் எம். பாலசுப்பிரமணியன் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன், சிஐடியூ மாநிலச் செயலா் பி.என். தேவா, மாநில துணைத் தலைவா் இரா. தெய்வராஜ், போக்குவரத்து மாநில சம்மேளனத்தின் துணைச் செயலா் வி. பிச்சை ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சிஐடியூ மாநிலச் செயலா் இரா. லெனின் நிறைவுரையாற்றினாா். டாஸ்மாக் –ஊழியா் மாநில சம்மேளன மாவட்டச் செயலா் ஜி. பொன்ராஜ் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com