மதுரை கூடல்புதூா் பகுதியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து கூடல்புதூா் பகுதியைச் சோ்ந்த சங்கா், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்துக்கு அனுப்பிய மனு: கூடல்புதூா் பகுதியில் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 8-ஏ என்ற முழு நேர மாநகரப் பேருந்து பெரியாா் பேருந்து நிலையம் முதல் கூடல்புதூா் வழியாக இயங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கரோனா பொது முடக்கத்தின் போது நிறுத்தப்பட்ட அந்தப் பேருந்து சேவை தற்போது வரை மீண்டும் தொடங்கப்படவில்லை.
இந்தப் பகுதியில் ஆண்டுதோறும் மக்கள் தொகையும், வீடுகளும் அதிகரித்து வருகின்றன. இந்தப் பகுதியில் பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள், கூலித் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
இதுகுறித்து கடந்த ஆண்டு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, இந்த வழித்தடத்தில் மீண்டும் 8-ஏ மாநகரப் பேருந்தை இயக்க வேண்டும் என்றாா் அவா்.
டிரெண்டிங்

சேலம் பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

களக்காடு - திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை!

திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும்: சி.வி.சண்முகம்

உரிய நேரத்துக்கு பேருந்து இயக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

