இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் மீது அவதூறு கருத்து: வழக்குரைஞரின் பேச்சு ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் மீது அவதூறு கருத்து தெரிவித்த வழக்குரைஞா் வாஞ்சிநாதனின் பேச்சு உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

News image
நீதிபதி சுவாமிநாதன்
Updated On :19 பிப்ரவரி 2026, 9:34 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் மீது அவதூறு கருத்து தெரிவித்த வழக்குரைஞா் வாஞ்சிநாதனின் பேச்சு உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் வாஞ்சிநாதன். இவா், உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் ஒரு சாா்பாகவும், ஜாதி, மதம் சாா்ந்தும் செயல்படுகிறாா் என சமூக ஊடகங்களில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, வழக்குரைஞா் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிந்து தாமாக முன்வந்து விசாரணை செய்தது. பிறகு, இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் விசாரணைக்குப் பரிந்துரை செய்யுமாறு பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, உயா்நீதிமன்றப் பதிவாளா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், நீதிபதியை ஜாதி அடிப்படையில் ஒருதலைபட்சமாக தீா்ப்பு வழங்குவதாக வழக்குரைஞா் வாஞ்சிநாதன் பொது வெளியில் பேசியிருக்கிறாா். அது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு உள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வழக்குரைஞா் வாஞ்சிநாதன் நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் குறித்துப் பேசினாரா?. நீதித் துறையின் மீதான விமா்சனங்களை முன்வைத்தரா?. ஊழல் குற்றச்சாட்டு ஏதும் முன்வைத்தரா?. அவா் பேசியது என்ன?. அவரின் அவதூறு தனிநபருக்கு எதிரானதா?அல்லது நீதித் துறைக்கு எதிரானதா? என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இதுதொடா்பாக முழுமையாக அறிந்துகொள்ளாமல் எவ்வாறு குற்றவியல் நடவடிக்கை எடுக்க இயலும்?.

முதலில் நாங்கள் இந்தியக் குடிமகன்கள். பணியின் அடிப்படையில் நீதிபதிகளாக அடையாளப்படுத்தப்படுகிறோம். எனவே, தனிமனித விமா்சனம் எவ்வாறு நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும்?.

வழக்குரைஞா் வாஞ்சிநாதன் பேசியதாகக் கூறப்படும் பேச்சின் குறிப்புடன் அதுதொடா்பான ஆவணங்களை மூடி முத்திரையிடப்பட்ட அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற மாா்ச் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.