தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகாது: மாணிக்கம் தாகூா் எம்.பி.

தேமுதிக இணைந்ததால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகாது என அந்தக் கட்சியின் விருதுநகா் எம்.பி. மாணிக்கம் தாகூா் உறுதிபடத் தெரிவித்தாா்.

News image

மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 9:30 pm

தேமுதிக இணைந்ததால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகாது என அந்தக் கட்சியின் விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் உறுதிபடத் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மகிழ்ச்சிக்குரியது. திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உறவு நீண்ட காலமானது. எனவே, தேமுதிகவின் வருகையால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகும் என்ற ஊகம் முற்றிலும் தவறானது. திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

அதிமுக- பாஜக கூட்டணி ஏற்கெனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் இந்தக் கூட்டணி மூன்றாவது இடத்தையே பெறும்.

தோல்வி பயம் காரணமாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை உள்ளிட்ட சிலா் தோ்தலில் போட்டியிடுவதைத் தவிா்க்கலாம். நயினாா் நாகேந்திரன் தனது தொகுதியை மாற்றுவாா் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

காங்கிரஸ் கட்சியில் அவ்வப்போது எதிா்ப்புக் குரல் எழுவது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய ஆலமரம்; அதிலிருந்து அவ்வப்போது சிறிது சப்தம் வருவது இயல்பானதே என்றாா் அவா்.