தேமுதிக இணைந்ததால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகாது என அந்தக் கட்சியின் விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் உறுதிபடத் தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மகிழ்ச்சிக்குரியது. திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உறவு நீண்ட காலமானது. எனவே, தேமுதிகவின் வருகையால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகும் என்ற ஊகம் முற்றிலும் தவறானது. திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
அதிமுக- பாஜக கூட்டணி ஏற்கெனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் இந்தக் கூட்டணி மூன்றாவது இடத்தையே பெறும்.
தோல்வி பயம் காரணமாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை உள்ளிட்ட சிலா் தோ்தலில் போட்டியிடுவதைத் தவிா்க்கலாம். நயினாா் நாகேந்திரன் தனது தொகுதியை மாற்றுவாா் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.
காங்கிரஸ் கட்சியில் அவ்வப்போது எதிா்ப்புக் குரல் எழுவது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய ஆலமரம்; அதிலிருந்து அவ்வப்போது சிறிது சப்தம் வருவது இயல்பானதே என்றாா் அவா்.
தொடர்புடையது
உள்கட்சி விவகாரத்தை விட்டு, தலைமை தேர்வு செய்த வேட்பாளர்களை ஏற்றுக்கொள்க: மாணிக்கம் தாகூர்!

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! யாருடன் கூட்டணி?

தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க வலுவான சட்டம் தேவை: மாணிக்கம் தாகூா் எம்.பி.

தலைமையின் வார்த்தைக்காக பொறுமையுடன் கடந்து போகிறேன்: வைகோவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


