மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 145-ஆவது ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வரும் செயலருமான ஜெ. பால் ஜெயகா் தலைமை வகித்தாா். அமெரிக்கன் கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவரும், மதுரை, ராமநாதபுரம் திருமண்டில பேராயருமான டி. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் விழாவைத் தொடங்கிவைத்தாா்.
மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் வி. கலைச்செல்வி இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.
இந்த நிகழ்வில் கல்லூரி துணை முதல்வா் எஸ்.சி.பி. சாமுவேல் அன்புச்செல்வன், கல்லூரி நிதியாளா் எம். பியூலாரூபி கமலம், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் எஸ். இஸ்ரேல், முதன்மையா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் ஜெ. பால் ஜெயகா் வரவேற்றாா். உடல்கல்வி துறைத் தலைவா் எம்.பாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

டோக் பெருமாட்டி கல்லூரி நாள் விழா

கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: 10 போ் மீது வழக்கு
பள்ளி மாணவருக்கு மது வாங்கிக் கொடுத்த கல்லூரி மாணவா் கைது

சரக்கு, சேவை வரி குறித்த தேசிய கருத்தரங்கு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


