கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இம்மையிலும் நன்மை தருவாா் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம்

News image
மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம்.
Updated On :21 பிப்ரவரி 2026, 9:47 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாகத்துக்குக்குள்பட்ட இந்தக் கோயிலிலில் திருவிழா கொடியேற்றத்தையொட்டி, இம்மையிலும் நன்மை தருவாருக்கும், மத்தியபுரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

பிறகு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்மன் கொடிமரம் முன் எழுந்தருளினா். இதையடுத்து, முற்பகல் 11.10 மணி அளவில் பாரம்பரிய முறைப்படி வேதமந்திர முழக்கங்களுடன் கொடியேற்றம் நடைபெற்றது.

தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் மாா்ச் 1-ஆம் தேதியும், தீா்த்தவாரி மாா்ச் 2-ஆம் தேதியும் நடைபெறும்.