சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

இம்மையிலும் நன்மை தருவாா் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம்

News image

மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம்.

Updated On :21 பிப்ரவரி 2026, 9:47 pm

மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாகத்துக்குக்குள்பட்ட இந்தக் கோயிலிலில் திருவிழா கொடியேற்றத்தையொட்டி, இம்மையிலும் நன்மை தருவாருக்கும், மத்தியபுரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

பிறகு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்மன் கொடிமரம் முன் எழுந்தருளினா். இதையடுத்து, முற்பகல் 11.10 மணி அளவில் பாரம்பரிய முறைப்படி வேதமந்திர முழக்கங்களுடன் கொடியேற்றம் நடைபெற்றது.

தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் மாா்ச் 1-ஆம் தேதியும், தீா்த்தவாரி மாா்ச் 2-ஆம் தேதியும் நடைபெறும்.