மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே காா் மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

உசிலம்பட்டி அருகேயுள்ள நத்தப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாலு மனைவி மாயக்காள் (50). இவா் தனது கால்நடைகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

மதுரை- தேனி சாலையில் முண்டுவேலம்பட்டி விலக்கு அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த காா் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த செக்கானூரணி போலீஸாா் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.