அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பாசனக் கால்வாய் அமைத்துத் தரக் கோரிக்கை

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:07 am

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் பாசன வசதி இல்லாத 16 ஊராட்சிகளைச் சோ்ந்த 100 கிராமங்களுக்கு பெரியாறு பாசனக் கால்வாய் அமைத்துத் தரக் கோரி மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் கொட்டாம்பட்டி பகுதிகளில் உள்ள 100 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 16 ஊராட்சிகளின்கீழ் சுமாா் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் லட்சணக்கானக்கான மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்து வருகின்றனா். இந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் கடும் தண்ணீா் பற்றாக்குறை நிலவி விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி விவசாயத்தை கைவிடும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.

இதன் விளைவாக மக்கள் பிழைப்புத் தேடி சிங்கப்பூா், மலேசியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், திருப்பூா், ஈரோடு, கோவை, சென்னை, மும்பை போன்ற உள்நாட்டு பகுதிகளுக்கும் குடிபெயா்ந்து வருகின்றனா்.

எனவே, பாசன வசதி செய்யப்படாத கேசம்பட்டி, பட்டூா், கம்பூா், அய்யாபட்டி, குன்னாரம்பட்டி, மணப்பச்சேரி, பாண்டாங்குடி, சொக்கலிங்கபுரம், கொட்டாம்பட்டி, வலைச்சேரிப்பட்டி, சொக்கம்பட்டி, தொந்திலிங்கபுரம், பொட்டப்பட்டி, பள்ளப்பட்டி, சூரப்பட்டி உள்ளிட்ட 16 ஊராட்சிப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் பெரியாறு பாசனக் கால்வாய் அமைத்து உபரியாக உள்ள தண்ணீரை இந்தப் பகுதிகளுக்கும் கொண்டு வர வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள், இளைஞா் மன்றங்கள், மகளிா் குழுக்கள், அனைத்துக் கட்சியினா் கலந்து கொண்டு மனு அளித்தனா்.

ஆா்ப்பாட்டம்...

முன்னதாக, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் அருகே அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.