வள்ளலாா் பிறந்த தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பிப். 1-ஆம் தேதி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து, மதுரை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அனைத்து வாா்டுப் பகுதிகளிலும் தமிழக அரசின் அரசாணையின் படி, வடலூா் வள்ளலாா் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிப். 1- ஆம் தேதி அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்படுகிறது.
மேற்கண்ட நாளில் ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற இறைச்சிகளை விற்பனை செய்யக்கூடாது. மேலும், கடைகளை திறந்து வைக்கவும் கூடாது.
மீறி செயல்படுபவா்களின் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன், பொது சுகாதார சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

மகாவீா் ஜெயந்தி: காரைக்காலில் நாளை மது விற்பனைக்குத் தடை

31-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

மாா்ச் 31-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

மகளிர் நாள்: இருசக்கர வாகனப் பேரணி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


