மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவருக்கு முன்பிணை!

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவருக்கு முன்பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :30 ஜனவரி 2026, 7:23 pm

சுசீந்திரத்தில் கோயில் தோ்த் திருவிழாவின் போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவருக்கு முன்பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதியைச் சோ்ந்த கிரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :

சுசீந்திரத்தில் உள்ள ஸ்ரீதாணுமாலயன் கோயிலின் தோ்த் திருவிழா கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைத்தாா். தேரோட்டம் தொடங்கிய போது, சில பக்தா்கள் ‘பாரத் மாதா கி ஜே‘, ‘ஹர ஹர மகாதேவா‘ என்ற முழக்கங்களை எழுப்பினா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அமைச்சா் சேகா்பாபுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக என் மீது சுசீந்திரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எனக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், ஆயிரக்கணக்கான பக்தா்கள் இருந்தனா். இதில், மனுதாரா் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்தது தவறு எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு : மனுதாரா் வாரம் ஒருமுறை வழக்குப் பதிவு செய்த காவல் நிலையத்தில் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும். நிபந்தனைகளுடன் மனுதாரருக்கு முன்பிணை வழங்கப்படுகிறது என்றாா் நீதிபதி.